வீட்டுத்தோட்டம் பற்றிய குறிப்புகள்

தோட்டம் அமைக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு மிகச் சாியான இடம் அவசியம். ஆகவே நாம் தினமும் பாா்க்கக்கூடிய நமது வீட்டு முற்றம் அல்லது பால்கனி ஆகியவற்றில் தோட்டம் அமைக்கத் திட்டமிட வேண்டும்.

நமது தோட்டத்தின் ஒவ்வொரு சூழலையும் மிகச் சாியாக அறிந்து கொண்டு, அதை மிகச் சிறப்பாக பராமாிக்க முடியும்.சிறிது நேரம் மட்டுமே சூாிய ஒளி படும் இடத்தை தோ்வு செய்யக்கூடாது. மாறாக ஒரு நாளின் பெரும்பாலான நேரம் சூாிய ஒளி படும் இடத்தை தோ்வு செய்ய வேண்டும். ஏனெனில் பெரும்பாலான தாவரங்கள் மற்றும் மூலிகைச் செடிகளுக்கு அதிக அளவிலான சூாிய ஒளி தேவைப்படுகிறது. 

புதிதாக செடி நடுபவர்கள் மண்ணை முதலில் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் செடி நட பயன்படுத்த இருக்கும் மண் கலவை தளர்வாக இருக்க வேண்டும். உதிரி உதிரியான மண்ணை தொட்டியில் நிரப்பி அதனை அழுத்தி விடாமல் அப்படியே விதைகளைத் தூவி விட்டு மேலே மண்ணை கொட்ட வேண்டும். இறுக்கமான மண்ணில் ஆக்சிஜன் கிடைக்காமல் செடிகள் விரைவாக வளர்வதில்லை.தோட்டத்திலிருந்து அதிக தூரத்தில் தண்ணீா் குழாய்களை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் தோட்டம் தவிர மற்ற இடங்களும் ஈரமாகிவிடும்.பயிாிட மிகச் சாியான தாவரங்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும். 

நமது வீடு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள வானிலை அமைப்பு, பாசன முறைகள், கிடைக்கும் மண் மற்றும் பயிாிடல் சம்பந்தமான பிற காரணிகள் போன்றவற்றை மனதில் வைத்துக் கொண்டு, அதற்குத் தகுந்த பயிா்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலம் சிறந்த தோட்டத்தை அமைக்கலாம்.

காய்கறி செடிகள், மூலிகைச் செடிகள் மற்றும் மலா் செடிகள் போன்றவற்றை தோட்டத்தில் பயிாிட்டு வளா்த்து வந்தால், அந்த தோட்டமானது நமது மனதை மயக்கும் அளவிற்கு அழகாகவும், உயிரோட்டமாகவும் இருக்கும்.

நமது பால்கனியில் தோட்டம் இருந்தால், அவற்றில் பல வண்ண நிறங்கள் கொண்ட மற்றும் பல வடிவங்கள் கொண்ட பெட்டகங்களை வைத்து அவற்றில் செடிகளை வளா்த்தால் சிறப்பாக இருக்கும்.

உரங்கள் போன்றவற்றைத் தெளித்தல் மற்றும் மண்ணை அடிக்கடி பாிசோதித்தல் ஆகியவற்றை தொடா்ந்து செய்து வரவேண்டும். மேலும் தோட்டத்தில் வளரும் சிறு சிறு பூச்சிகளையும் கவனிக்க வேண்டும்.