பங்குச்சந்தையின் வரலாறு


இந்தியாவின் முதல் பங்குச்சந்தை 1875 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

மும்பை பங்குச்சந்தை இந்தியாவின் பழமையான பங்குச்சந்தை ஆகும். இது 1875 ஆம் ஆண்டு318 உறுப்பினர்களுடன் தனது பங்கு வர்த்தகத்தை (Trading)தொடங்கியது. அதன் பிறகு 1965 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது.இது சென்செக்ஸ் (SENSEX) எனப்படும் அளவுகோலால் 1986 ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்படுகிறது. இது மும்பை பங்குச்சந்தையின் அடையாள குறியீட்டு எண் ஆகும். சென்சிட்டிவ் இண்டெக்ஸ் (Sensitive Index) என்பதன் சுருக்கமே சென்செக்ஸ் ஆகும். இக்குறியீட்டு எண் அதிகரிக்க அதிகரிக்க பங்குச்சந்தை (Stock Market raising)நன்றாக உள்ளதாகவும், குறைய குறைய பங்குச்சந்தை வீழ்ச்சி (Stock Market falling) அடைவதையும் குறிக்கும்.சென்செக்ஸ் (SENSEX) பங்குச்சந்தையில் நன்றாக வர்த்தகம் செய்துகொண்டிருக்கும் முதல் முப்பது (30)கம்பனிகளின் பங்குகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. இதனால் மும்பை பங்குச்சந்தை பி.எஸ்.சி-முப்பது (BSE-30) என்றும் அழைக்கப்படுகிறது.

பி.எஸ்.சி (BSE) யின் வெளிப்புற சுவற்றில் மிகப்பெரிய திரையகத்தின்(Wide Screen) மூலமாக நடப்பு பங்குகளின் புள்ளிகள் திரையிடப்படும். இதே விரங்களை NDTVதொலைக்காட்சியிலும் காணலாம்.

தேசிய பங்குச்சந்தை மும்பையில் நிருவப்பட்டது. இது நிஃப்டி (Nifty) என்னும் அளவுகோலால் (Benchmark) கணக்கிடப்படுகிறது. நிஃப்டி, பங்குச்சந்தையில் நன்றாக லாபம் கொழித்து கொண்டிருக்கும் முதல் ஐம்பது (50) கம்பனிகளின் பங்குகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. இதனால் நிஃப்டி-ஐம்பது (Nifty-50) என்றும் அழைக்கப்படுகிறது.


பங்குச் சந்தை வீழ்ச்சி என்பது பங்கு விலைகளில் விரைவான மற்றும் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படாத வீழ்ச்சியாகும். ஒரு பங்குச் சந்தை வீழ்ச்சி என்பது பெரிய பேரழிவு நிகழ்வுகள், பொருளாதார நெருக்கடி அல்லது நீண்டகால ஊகக் குமிழியின் சரிவு ஆகியவற்றின் பக்க விளைவுகளாக இருக்கலாம்.பங்குச் சந்தை செயலிழப்புகள் பொதுவாக இழப்பால் தூண்டப்படுகின்றனமுதலீட்டாளர் எதிர்பாராத நிகழ்வுக்குப் பிறகு நம்பிக்கை, மற்றும் பயத்தால் அதிகரிக்கிறது

வால் வீதி வீழ்ச்சி  1929 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமெரிக்கப் பங்குச் சந்தை சந்தித்த மிக அழிவுகரமான வீழ்ச்சிகளின் ஒன்றாகும். இதனால் ஏற்பட்ட தாக்கத்தின் முழுமையான மதிப்பீடு மற்றும் கால அளவைக் கொண்டே இது பெரும் வீழ்ச்சி என அறியப்படுகிறது.அமெரிக்காவில் இந்த பங்குச்சந்தை வீழ்ச்சியின் தாக்கம் 1941 இறுதியில் இரண்டாம் உலக போருக்கு அமெரிக்க அணிதிரட்டல் தொடங்கிய வரை முடியவில்லை.நியூயார்க் நகரத்தில் அமெரிக்கப் பங்குச் சந்தையும் பிற நிதி நிறுவனங்களும் சந்தை முகவர்களும் இடம் பெற்றிருந்த சாலை வால் வீதி ஆகும். எனவேதான் இந்த பங்குச் சந்தை வீழ்ச்சி வால்வீதி வீழ்ச்சி எனப்படுகிறது.

பங்குச் சந்தை வீழ்ச்சிக்கான காரணங்கள்:

அதிகப்படியான நம்பிக்கை 

உயரும் பங்கு விலைகள் மற்றும் அதிகப்படியான பொருளாதார நம்பிக்கையின் நீண்ட காலம்

ஒழுங்குமுறை அல்லது புவிசார் அரசியல் 

பெரிய நிறுவன ஹேக்ஸ், போர்கள், கூட்டாட்சி சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் மாற்றங்கள் மற்றும் அதிக பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் பகுதிகளின் இயற்கை பேரழிவுகள் போன்ற பிற அம்சங்களும் பரந்த அளவிலான பங்குகளின் NYSE மதிப்பில் குறிப்பிடத்தக்க சரிவை பாதிக்கலாம்.

உயர் மதிப்பீடு 

பி / இ விகிதங்கள் (விலை-வருவாய் விகிதம்) நீண்ட கால சராசரிகளைத் தாண்டிய சந்தை, மற்றும் சந்தை பங்கேற்பாளர்களால் விளிம்பு கடன் மற்றும் அந்நியச் செலாவணியின் விரிவான பயன்பாடு.