உலகக்கோப்பை காற்பந்து விளையாட்டின் வரலாறு

உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள ஒரே விளையாட்டு கால்பந்து மட்டுமே. கால்பந்துக்கு ரசிகர்கள் இல்லாத நாடே இல்லை என்று கூறும் அளவுக்கு மிகத் தீவிரமான ரசிகர்களைக் கொண்ட ஒரே விளையாட்டும் கால்பந்து மட்டுமே.


அதிலும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி என்பது உலக கால்பந்து ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாகும். வீரர்களையும், அணிகளையும், அவர்களின் அட்டகாச, ஆவேச ஆட்டங்களையும் காண தயாராகி விடுவார்கள் கால்பந்து ரசிகர்கள்.

எந்த அணி வெல்லும், எந்த வீரர் அதிக கோல் அடிப்பார், யாருக்கு கோப்பை என்ற பெட்டிங்கும் படு சூடாக நடக்கும். அந்த கால்பந்து திருவிழா தற்போது வந்து விட்டது.

உலகக் கோப்பைப் போட்டிகள் வந்ததே ஒரு பெரிய வரலாறாகும். உலகக்கோப்பை காற்பந்து எனப்படுவது வெவ்வேறு நாடுகளில், பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் ஆண்களின் தேசிய காற்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான உலகளவிலான போட்டியாகும். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் வழங்கப்படும். 1928ம் ஆண்டு சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவராக இருந்தவரான ஜூல்ஸ் ரிமெட், சர்வதேச அளவில் ஒரு கால்பந்துத் தொடரை நடத்த திட்டமிட்டார்.இந்தப் போட்டியானது 1930 ஆம் ஆண்டு முதல், இன்றுவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடைபெற்று வருகின்றது.


உலகின் முதல் சர்வதேச கால்பந்து போட்டி, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையில் 1872 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடைபெற்றது. இச்சவால் போட்டியானது வெற்றி தோல்வி ஏதுமில்லா சமனில் முடிந்தது. இங்கிலாந்து நாட்டின் உள்ளூர் சாம்பியன் கோப்பை சர்வதேச போட்டி 1884 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இருபதாம் நூற்றாண்டில் கால்பந்து போட்டிகள் உலகின் மற்ற பகுதிகளில் பிரபலமாக வளர்ச்சியடைந்தன. 1900 மற்றும் 1904 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 1906 ஆம் ஆண்டு இடைச்செருகலாக நடைபெற்ற போட்டிகளில், காற்பந்தாட்டப் போட்டி பதக்கங்கள் வழங்கப்படாமல் காட்சிப் போட்டியாக மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்றுள்ள 21 உலக கோப்பை போட்டிகளில் எட்டு(8) வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. பிரேசில் அணி ஐந்து (5) முறை வெற்றி பெற்றுள்ளதோடு நடைபெற்றுள்ள அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய ஒரே அணியாகத் திகழ்கிறது. ஜெர்மனி, இத்தாலி ஆகியவை நான்கு (4) முறையும், அர்ஜென்டீனா, உருகுவே, பிரான்ஸ் (2018) ஆகியவை இரண்டு (2) முறையும், இங்கிலாந்து,  எசுப்பானியா ஆகியவை ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ள மற்ற நாடுகளாகும்.

தென் ஆப்பிரிக்காவில் ஜூன் 11ம் தேதி தொடங்கி ஜூலை 11ம் தேதி வரை 19வது உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. 32 அணிகள், 64 ஆட்டங்கள் என ஒரு மாத காலத்திற்கு உலகக் கால்பந்து ரசிகர்களுக்கு தினசரி விருந்து காத்திருக்கிறது.