மாதுளையின் பல்வேறு நன்மைகள்

மாதுளை ஒரு வகை அருமையான உணவு. மாதுளையின் பழங்கள், பூக்கள், இலைகள் என அனைத்தும் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது. இது பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் உறைவிடமாக இருப்பதால் பல வகையான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.மாதுளம்பழத்துக்கு அயல்நாடுகளில் இன்னொரு பெயர் உண்டு.`சைனீஸ் ஆப்பிள்’. பழங்களிலேயே பழமையானது, சிறந்தது மாதுளம்பழம்தான். உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும். மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும் குணங்களையும் கொண்டது.


நன்மைகள்:

எலும்பு வலி மற்றும் மூட்டு வலி போன்றவற்றால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் மாதுளை சாப்பிட வேண்டும். இதில் அதிக அளவில் இரும்பு மற்றும் கால்சியம் உள்ளது. கீல்வாதம் உள்ளவர்கள் மாதுளையை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் மாதுளை சாப்பிடுவதன் மூலம்  எலும்புகளை வலுப்படுத்து இயலும். 

உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான  ஆற்றல் கிடைக்கும்.

மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதாலும், அதன் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை, காயங்களின் மீது தடவுவதாலும் காயம் விரைவில் குணமாகும். அத்துடன் தழும்புகளும் மறையும்.

மாதுளையில் ஒரு நல்ல அளவில் ஆன்டிபயோடிக் மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் இருக்கின்றன, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க உதவுகிறது. வலுவான நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக நோய்கள் உண்டாகும்  ஆபத்து குறைகிறது.


மாதுளை ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது, இது, உச்சந்தலையில் உள்ள இரத்த அழுத்தத்தை சமப்படுத்துகிறது. சிக்கலான, பலவீனமான, உயிரற்ற முடியை வலுப்படுத்த உதவுகிறது. முடி உதிர்தல் பிரச்சினையை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள் என்றால், மாதுளை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். மாதுளை முடியை பளபளப்பாகவும் அழகாகவும் மாற்ற உதவுகிறது. மாதுளை கூந்தலின் நன்மைக்காக  வைட்டமின்கள் மற்றும் சத்தான பொருட்களை வழங்குகிறது. 

இதை தினமும் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

மாதுளையில் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஆன்ட்டி அழற்சி பண்புகள் உள்ளன, அவை உடலை வலிமையாக்குகின்றன. மாதுளையை  சரியான  அளவில் உட்கொள்வதன் மூலம் சிறுநீரக பிரச்சினையிலிருந்து சிறந்த நிவாரணம் கிடைக்கிறது. மேலும், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை அல்லது சிறுநீரக கற்கள் இருக்கும் நபர்கள்  மாதுளையை எந்த அளவில் உட்கொள் வேண்டும்  என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து உட்கொள்ள வேண்டும்.

அயல்நாடுகளில், பிறந்த குழந்தையின் மூளையில் எந்தப் பாதிப்பும் வராமல் தடுப்பதற்கு மாதுளை சிரப்பைத்தான் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும்.

மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.