இந்திய குடும்பங்கள் 22,000 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை வைத்துள்ளன. மேலும், ஒவ்வொரு வருடமும் நகைகளை உற்பத்தி செய்வதற்காக 600 டன் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தங்கத்தின் தூய்மையை கணிப்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை. தூய தங்கத்தையும் மற்றும் மஞ்சளாகத் தோன்றும் ஒரு உலோகத்தையும் நீங்கள் எவ்வாறு வேறுபடுத்தி அறிவீர்கள்?
ஹால்மார்க்கிங்
ஹால்மார்க்கிங் என்பது விலையுயர்ந்த உலோகப் பொருட்களில் அந்த விலையுயர்ந்த உலோகப் பொருள் சேர்ந்துள்ள அளவின் துல்லிய மதிப்பு மற்றும் அங்கீகார பதிவாகும். இவ்வாறு ஹால்மார்க் என்பது விலையுயர்ந்த உலோகப் பொருட்களின் தூய்மை அல்லது உயர் தரத்திற்கு உத்தரவாதமாக பல நாடுகளில் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ குறியீடாக இருக்கிறது.
இந்தியாவில், தங்கத்தின் தூய்மை மதிப்பிடுவதற்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு இலாகா (BIS) அதிகாரம் பெற்றுள்ளது. இதன் உயர்மட்டக் குழுவானது IS 15820:2009 சான்றளிக்க சில மதிப்பீட்டு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. BIS-சான்றளிக்கப்பட்ட நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையிட அங்கீகாரம் பெற்ற இந்த மையங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.சான்றிழிக்கப்பட்ட நகை வியாபாரிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் பெற்ற மையங்களில் இருந்து முத்திரைகளைப் பெற தகுதியுள்ளது. எனவே, ஒரு நம்பகமான நகை வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களை கண்டறிய ஒரு ஹால்மார்க் உதவுகிறது.
பொதுவாக தங்க நகையானது விலையுயர்ந்த உலோகம் சேர்ந்துள்ள அளவை ஆராய்ந்த அல்லது மதிப்பிட்ட பிறகு தான் அது ஹால்மார்க் முத்திரையிடப்படுகிறது.
இன்று, உற்பத்தி செய்யப்பட்ட தங்கப் பொருட்களில் நவீன எக்ஸ்-ரே ஒளிர்வு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு கம்ப்யூட்டர் மூலம் அழியாத, விரைவான மற்றும் தானியங்கு பிரிண்டிங்கை உறுதிசெய்கிறது.கட்டித் தங்கத்தைப் பொறுத்தவரை, ‘தீ மதிப்பீடு’ அல்லது ‘புடமிடுதல்’ முறையை பயன்படுத்தலாம்.
ஒரு தங்கப் பொருளில் ஒவ்வொரு ஹால்மார்க்கும் நான்கு அடையாளங்களை கொண்டிருக்கிறது: தூய்மையை பின்வரும் கேரட் தரக் குறியீடு மூலம் கண்டறியலாம். காரட் அதிமானால், தங்கத்தின் தூய்மையும் அதிகமாகும். 24 காரட் என்பதே தங்கத்தின் தூய்மையான வடிவமாகும். பிற உலோகங்களும் கலந்துள்ளன என்பதையே குறைவான காரட் சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள் 22 காரட், 18 காரட் 14 காரட் என்ற மூன்று தர நிலைகளில் மட்டுமே கிடைக்கின்றன.
தங்கத்தின் மருத்துவ குணங்கள்
நூற்றாண்டுகளுக்கு முன், பண்டைக் கால மக்கள் ரசவாத மூலக்கூறுகளால் அதிக தங்கச் சரக்கிருப்பை அமைத்து வைத்திருந்தனர். பண்டைய எகிப்து, ஐரோப்பா, மற்றும் இந்தியாவில் கூட, தங்கம் பல்வேறு விதமான நோய்கள் மற்றும் மூட்டு வாதம் முதல் அஜீரணம் வரையிலான உடல் உபாதைகளுக்கு எதிராக பாதுகாப்பளிக்கும் மற்றும் சிகிச்சைக்குப் பயன்படும் என்கிற நம்பிக்கை நிலவியது. உணவு மற்றும் பானங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டது.
‘தங்கத் தண்ணீர்’ என்று மிகச் சரியான மொழிபெயர்ப்பினைக் கொண்டிருக்கும் கோல்ட்வாஸர் எனப்படும் ஒரு வகை மதுபானம், 16 ஆம் நூற்றாண்டில் போலிஷ் நகரமான டன்ஸ்க், அதன் பிறகு டன்ஜிக்கில் முதன்முதலில் காய்ச்சப்பட்டது. அதில் தங்கத் துகள்கள் கலக்கப்பட்டிருந்தன. ரஷ்ய மன்னர் பீட்டர் மற்றும் அவருடைய மனைவி கேத்தரின் தி கிரேட்டின் விருப்ப பானமாக இது குறிப்பிடப்படுகிறது.
தூய தங்கம் மற்றும் வெள்ளி பஸ்மம் (சாம்பல்): இவை ஆயுர்வேதத்தில் சக்தி வாய்ந்த புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருளாக பாராட்டப்பட்டுள்ளது. அவை உடலின் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது மற்றும் ஆயுளையும் மற்றும் சுறுசுறுப்பையும் தொடர்ந்து பராமரிக்கிறது.தங்கம், சருமத்திற்கு நன்மைத்தரக்கூடியது என்று நம்பப்படுகிறது.
இன்று, தங்கமானது உணவுகளில், அந்தஸ்து மற்றும் செல்வாக்கை வெளிப்படுத்துவதற்கு, அடிப்படையாக ஓர் அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தபடுகிறது.தங்கத்தின் வீக்கத்திற்கு எதிரான பண்புகளினால் இது முடக்குவாதச் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இது புற்றுநோய் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. அங்கு புற்றுநோயை குணப்படுத்தும் மருந்துகளை சுமந்து சென்று நேரடியாகக் கட்டிகளுக்கு விநியோகம் செய்யும் கடத்திகளாக செயல்படுகிறது.