கிரிடேசியஸ் காலத்து கல் மரமா இது!

 பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூரில், எம்.எஸ்.கிருஷ்ணன் என்ற புவியியல் ஆய்வாளர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் ஒன்றினை கண்டறிந்து பதிவு செய்தார். அதன் பின்னர் பல்வேறு கல் மரத்துண்டுகள் இந்த பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராமங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் கிரிடேசியஸ் காலத்து மரமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆலத்தூர் வட்டத்தில் மட்டுமே காணக்கிடைக்கப் பெற்றுவந்த இந்தவகை கல்மரத்துண்டுகள் தற்போது குன்னம் வட்டார பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வரும் தலைமுறைக்கு இப்பகுதி ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்பதற்கான சான்றாக, இதனை பாதுகாக்க வேண்டும் என்றும், இந்த பகுதியை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags