வாழை மரம். ஒரு பொருள் கூட சற்றும் வீணாகாமல் நம்மால் பயன்படுத்த முடியும் என்றால் அது வாழை மட்டும் தான். வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் என எல்லாமே நிறைவான நன்மைகளை தரக்கூடியவை.இதன் ஒவ்வொரு பகுதியும் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகளால் நிறைந்துள்ளது.
வாழைத்தண்டு நார்ச்சத்து அதிகம் நிறைந்தவை இது புண்கள் அல்லது வயிற்றில் அமிலத்துக்கு சிகிச்சை அளிக்க உதவும். வாழைப்பழங்கள் போன்று வாழைத்தண்டுகளும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவற்றை கொண்டுள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது.
வாழைத்தண்டு சிறுநீர்ப்பாதை மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க மிகச்சிறந்த இயற்கை உணவு. வாழைத்தண்டு வைட்டமின் பி 6 மற்றும் பொட்டாசியம் மற்றும் டையூரிடிக் பண்புகளை கொண்டுள்ளது.
சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று காரணமாக உண்டாகும் வலி அசெளகரியங்களுக்கும் இவை சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.
சிறுநீரகஉடல் எடையைக் குறைக்க பலரும் பல்வேறு வழிகளைப் பின்பற்றுவார்கள். ஆனால் வாழைத்தண்டு சாறு குடிப்பதன் மூலமும் உடல் எடையைக் குறைக்க முடியும். வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகவும் நல்ல பலன்களைத் தரும்.
நார்ச்சத்து கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை வேகமாகக் கரைக்கும்.
நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால் உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.
நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.
மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
வாழைத்தண்டை அவ்வபோது சேர்த்து வருவதன் மூலம் உடலில் அதிக இரத்த அழுத்தத்தை கொண்டிருப்பவர்கள் கட்டுக்குள் வைக்கலாம். குறைந்தது உடலுக்கு ரத்த அழுத்த பிரச்சனையால் உண்டாகும் விளைவுகளின் அபாயத்தை குறைக்க செய்யும்.
வாழைத்தண்டுகளின் சாறு உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது சிறந்த டையூரிடிக் பண்புகளை கொண்டிருப்பதால் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது.
கீரை, பேரிச்சம்பழம், முருங்கை போன்ற இரும்புச்சத்துடைய உணவுகள் நிறைய இருந்தாலும், சிலருக்கு ரத்தசோகை வந்துவிடுவதுண்டு. வாழைத்தண்டில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதோடு, வைட்டமின் பி6 ம் அதிக அளவில் இருக்கிறது. அதனால் ரத்தத்தில் ஹீமாகுளோபின் அளவினை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையை குணமாக்குகிறது.
இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.வாரத்துக்கு மூன்று முறை இதை அருந்திவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.