பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழமே. மிகவும் சுவையான மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது அல்ல. அதனுள் உள்ள மருத்துவ குணங்களை சொன்னால் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள். அத்தனை ஆற்றல் உள்ளது அதற்கு.
மாம்பழத்தில் பூரிதக் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இதில் மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் காப்பர் போன்ற கனிமங்களும் இதில் வளமாகக் காணப்படுகிறது. இது போக க்யூயர்சிடின், பீட்டா கரோட்டின் மற்றும் ஆஸ்ட்ராகாலின் போன்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான்கள் நிறைய உள்ளன. இந்த சக்தி வாய்ந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பான்களுக்கு இயங்கு உறுப்புகளை நடுநிலையாக்கும் சக்தி உள்ளது.
நன்மைகள்:
கடுமையான வேலை செய்பவர்களுக்கு சிறிது நேரத்திலேயே உடலின் பலம் வலுவிழந்து விடும். அதோடு உடல் சோர்வாகி விடும்.மாம்பழத்தில் உடலுக்கு தேவைப்படக் கூடிய விட்டமின் மற்றும் தாது சத்துக்கள் அதிகம் உள்ளது.எனவே மாம்பழம் சப்புவதை மூலம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.
மாம்பழத்தில் உள்ள வைட்டமின்களின் உள்ளடக்கம் மிகவும் அதிகம். இது நமக்கு அனைத்து வழிகளிலும் நல்ல உடல் நலத்தை கொடுத்து உதவும். வளமான அளவு பொட்டாசியம் (146 மில்லிகிராமில் 4%) மற்றும் மெக்னீசியம் (9 மில்லிகிராமில் 2%) உள்ள மாம்பழம் அதிக இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இயற்கை மருந்தாக அமைகிறது.
மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும்.
ஒரு சிலருக்கு வயிறு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் வயிற்றில் பூச்சி போன்ற தொல்லைகளால் அவதியுறுகின்றனர்.இதில் இருக்கக்கூடிய இயற்கை ரசாயனங்கள் வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது.
நம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தைக் கொண்டு செல்லும் பணியினை நரம்புகள் செய்கின்றது.மாம்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் நரம்புகள் நன்கு வலுப்பெறுகின்றன.மேலும் நரம்புத்தளர்ச்சி சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும்.
தோலின் ஈரப்பதம் ஆனது இளம்வயதில் அதிகமிருப்பதால் சருமம் பளபளப்பான தோற்றத்தில் உள்ளது.இந்த நிலையானது வயது முதிர்வின் காரணமாக தோலில் உள்ள ஈரப்பதம் குறைய தொடங்கி சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது.எனவே மாம்பழத்தின் சாப்பிட்டு வருவதன் மூலம் சருமத்தின் சுருக்கம் நீங்கி தோல் பளபளப்பாகும்.
செரிமானமின்மை மற்றும் அமிலத்தன்மையினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது மாம்பழம். மாம்பழத்தில் உள்ள செரிமான நொதிகள் இயல்பான முறையில் செரிமானம் நடந்திட உதவும்.
மாம்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. மாம்பழங்களை ஒழுங்காகவும் தேவையான அளவும் உட்கொண்டால் குருதியின் அளவை அதிகரித்து இரத்த சோகையை சரிப்படுத்தும்.
கர்ப்பமான பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகளவில் தேவைப்படுவதால், அவர்கள் மாம்பழம் உண்ணுவது மிகவும் அவசியம். பொதுவாக கர்ப்பக் காலங்களில் இரும்புச்சத்து உள்ள மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதற்கு பதில் வளமான இரும்புச்சத்துள்ள சாறு நிறைந்த மாம்பழங்களை உண்ணுதல் சாலச் சிறந்தது.
முகப்பருவை சரிப்படுத்த மாம்பழம் மிகவும் உதவுகிறது. ஏனெனில் சருமங்களில் அடைப்பட்ட துவாரங்களை விடுவிக்க அது உதவும். இந்த துவாரங்கள் திறந்தவுடன் முகப்பருக்கள் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். அடைப்பட்ட துவாரங்களை நீக்கி விடுவதே முகப்பருவை நிறுத்த உதவும் சிறந்த வழி. இந்த பயனை அனுபவிக்க எப்போதும் மாம்பழம் சாப்பிட வேண்டியதில்லை. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் மாம்பழ கூழை எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும்.