கிழங்கு வகைகளில் அதிக சத்துக்கள் நிறைந்த ஒன்று என்றால் அது சர்க்கரை வள்ளி கிழங்குதான். இதனை நாம் அதிகம் பார்த்திருந்தாலும் சாப்பிடுவதில் அதிக ஆர்வம் செலுத்தியிருக்கமாட்டோம். நாம் எந்த உணவையெல்லாம் சாப்பிடாமல் தவிர்க்கிறோமோ அவையெல்லாம் பெரும்பாலும் ஆரோக்கியமானதாகவே இருக்கும் அதற்கு சிறந்த உதாரணம் சர்க்கரை வள்ளி கிழங்குதான்.
விட்டமின் ஏ, பி, சி, இரும்பு, பொட்டாசியம், ஆகியவை உள்ளன. இவை நல்ல உடன் நலத்தையும், சருமம், எலும்பு உருவாவதற்கும் தேவையான சத்துக்களை அளிக்கிறது.
நன்மைகள்:
உடல் உள்ளுறுப்புகளில் பாதிப்பு மற்றும் வீக்கங்கள் உண்டானால் அவற்றை சரிப்படுத்தும். விட்டமின் பி,சி மற்றும் நார்ச்சத்து ஆகியவைகளை கொண்டது. அதிக சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டவை.
கர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால், அதிலுள்ள ஃபோலேட் கருவளர்ச்சிக்கு உதவும்.
நுரையீரல் காற்றுப் பையில் எழும் பிரச்சனையின் காரணமாக வரும் நோய்தான் எம்ஃபைசீமா என்பது. இந்த நோயினால் சிறிது சிறிதாக ஆரம்பித்து மூச்சு விடுவதில் பிரச்சனை உண்டாகும். இதற்கு தினமும் சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிட்டால் இந்த நோய் குணமாகும்.
இக்காலத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனை தங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதில் பெரும்பாலானவர்கள் கவனமாக இருக்கின்றனர். கிழங்கு வகை உணவுகள் என்றாலே அதில் சிறிதளவாவது கொழுப்பு இருக்கும். ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொழுப்பு என்பது அறவே இல்லை. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம்.
நாம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் உணவை செரிக்கும் உறுப்புகளான வயிறு மற்றும் குடல்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாகும். அன்றாடம் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கும், அதிகமான கார வகை உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் வயிறு மற்றும் குடல் போன்றவற்றில் அல்சர் உருவாகிறது. சக்கரை வள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் ஏற்படும் இத்தகைய அல்சர் விரைவில் குணமாகிறது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து போன்றவை உள்ளன. இக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும்.
ஒரு சில வகை கிழங்குகளை சாப்பிடுவதால் சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம். ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உங்களின் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் புண்கள், நச்சுக்களை போக்கி, உங்களுக்கு மலச்சிக்கல், மூலம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே வாரம் ஒருமுறையாவது சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடுவது சிறந்தது.
இதன் பேரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர இது எந்த விதத்திலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இயற்கையாகவே இதிலுள்ள சர்க்கரை மிகவும் மெதுவாகவே இரத்தத்தில் கரையும். இதனால் இதனை கரைப்பது மிகவும் எளிது.
இதன் நிறமே உணர்த்தும் இதிலுள்ள கரோட்டீன்களை பற்றி. இதிலுள்ள பீட்டா கரோட்டின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. பீட்டா கரோட்டின் உங்கள் விழித்திரையை பாதுகாப்பதுடன் உங்கள் குணமாகும் தன்மையையும் அதிகரிக்கும். மேலும் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதுடன் வயதான தோற்றத்தையும் குறைக்கும். குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியது.