துளசிக்கு என்று பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. துளசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் பொதிந்து கிடப்பதால் தான் மக்கள் அதை பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்து மதத்தின் படி இந்த துளசி இலைகளை புனித துளசி என்று அழைக்கின்றனர். இந்த துளசி பெரும்பாலும் தேநீரில் சுவையை சேர்க்க பயன்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கென்று பல நன்மைகளை வழங்க கூடியது.
நன்மைகள்:
- சளிக்கு நல்ல மருந்து இந்த துளசி. உடல்ல வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுகிறது, உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதுக்கு உண்டு. துளசி சாறுகூட கொஞ்சம் தேன் கலந்துக் குடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும்.
- துளசி குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. துளசி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தொற்று நோய்களை தடுக்கவும் உதவுகிறது.
- துளசி இலைகளில் அடாப்டோஜன்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் உடலில் உள்ள மனஅழுத்த அளவைக் குறைக்க உதவும். இது உங்கள் நரம்பு மண்டலத்தை தளர்த்த உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது புலன்களை அமைதிப்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைப்பதில் பங்களிக்கிறது.
- துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து, தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால சொரி, சிரங்கு போன்றவை குணமாகும்.
- துளசி குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது. இது அமில ரிஃப்ளக்ஸை சமப்படுத்துகிறது மற்றும் உங்களுக்கு ஆரோக்கியமான செரிமானம் இருப்பதை உறுதி செய்ய pH அளவை பராமரிக்க உதவுகிறது.
- துளசியில் கணைய உயிரணுக்களின் செயல்பாட்டை ஆதரிக்கும் மூலக்கூறுகள் உள்ளன. இது இன்சுலினை மேலும் வெளியிடுகிறது. எனவே இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
- துளசியில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை வாய்துர்நாற்றம் போன்றவற்றை நீக்குகிறது. எனவே காலையில் எழுந்ததும் துளசி இலைகளை வாயில் போட்டு மென்று வாருங்கள். நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும்.
- நீங்கள் வெறும் வயிற்றில் துளசியை உட்கொள்ளும்போது அது உங்கள் இரத்தத்திலிருந்து நச்சுகளை வெளியேற்றி நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. முகப்பரு மற்றும் சரும கறைகளின் தோற்றத்தை குறைக்கிறது, இது உங்களுக்கு குறைபாடற்ற சருமத்தை அளிக்கிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உங்க சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. சருமழகை மேம்படுத்துகிறது.