உலகில் பல நாடுகள் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து டிஜிட்டல் பேமெண்ட் உலகின் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில், இந்தியா தனது டிஜிட்டல் பேமெண்ட் தளத்தின் அஸ்திவாரத்தைப் புதுப்பிக்கவும், மேம்படுத்தும் முயற்சியில் புதிய பேமெண்ட் சேவை தளமான e-RUPI அறிமுகம் செய்துள்ளது.
இ-ருபி என்பது வவுச்சர்களின் அடிப்படையிலான டிஜிட்டல் பரிவர்த்தனை அமைப்பு என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இ-ருபியை தேசிய பரிவர்த்தனைக் கழகம் உருவாக்கியுள்ளது.
இ-ருபி என்பது QR code அல்லது SMS மூலம் நேரடியாக பயனாளியின் மொபைலுக்கு அனுப்பப்படும் மின்னணு வவுச்சர் (e-voucher) ஆகும். பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ள e-RUPI மூலம் அரசின் பல திட்டங்களுக்கான நிதியுதவி நேரடியாக மக்கள் பெற முடியும். விவசாயிகள், கர்ப்பிணி, மருந்து, மருத்துவச் சிகிச்சைக்கான அரசு சலுகை பணத்தை நேரடியாகவும், உடனடியாகவும் பெற முடியும்.
பல ஆண்டுகளாக, அரசுக்கும் பயனாளிக்கும் இடையே, குறிப்பிட்ட விவரங்களுடன் இலக்குகள் மற்றும் ஆதார கசிவு இல்லாமல் அதன் நோக்கம் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
e-RUPI டிஜிட்டல் பேமெண்ட் தளம் பணத்தைக் கொடுப்பவரும், பணத்தைப் பெறுபவர்களுக்கும் மத்தியில் இணைக்கும் ஒரு பாலமாக இயங்கும். மேலும் இந்தச் சேவையை எந்த ஒரு அரசு நிறுவனமும், தனியார் நிறுவனமும் பெற்று மக்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களும் பணத்தை gift-voucher அல்லது cash-voucher ஆக அனுப்ப முடியும்.
e-RUPI டிஜிட்டல் பேமெண்ட் சேவை மக்களுக்கு மத்தியில் இயங்குபவை அல்ல.. இது B2C மாடலில் ஒரு நிறுவனம் அல்லது அமைப்புக்கும் - அதன் வாடிக்கையாளர்கள் அல்லது மக்களுக்கு மத்தியில் இயங்கும் ஒரு பேமெண்ட் சேவை முறை.
க்யூஆர் குறியீடு அல்லது எஸ்எம்எஸ் அடிப்படையிலான மின்னணு -சான்று. இது பயனாளிகளின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது. இந்த தடையற்ற, ஒரே முறை பணம் செலுத்தும் பொறிமுறையை பயன்படுத்துபவர்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு இல்லாமல், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் செயலி இல்லாமல் அல்லது நெட் பேங்கிங் முறையை பயன்படுத்தாமல், மின்னணு சான்று மூலம் சேவை அளிப்பவரிடம் பணம் செலுத்த முடியும்.முன்கூட்டியே பணம் செலுத்தப்படும்(ப்ரீ-பெய்டு) முறையாக இது இருப்பதால், எந்த நடுவர் தலையீடும் இன்றி, சேவை அளிப்பவருக்கு குறித்த நேரத்தில் பணம் செலுத்தப்படுவதை இது உறுதி செய்கிறது.
ஊழியர்களின் நலன் மற்றும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டங்களின் ஒரு பகுதியாகவும் இந்த டிஜிட்டல் சான்றுகளை தனியார் நிறுவனங்கள் கூட பயன்படுத்த முடியும்.
பணம் வழங்கும் நடைமுறைகள் முடிவடைந்த பிறகே, அதாவது டிரான்சாக்ஷன் வெற்றிகரமாக நடந்த பிறகே வவுச்சரில் இருக்கும் பணம் சம்பந்தப்பட்ட சேவை வழங்குநருக்கு செலுத்தப்படும். இந்த பரிவர்த்தனைக்கு இடையே எந்தவொரு இடைநிறுவனமும் இருக்காது. உங்களுக்கான பணம் வவுச்சர் வடிவில் இருக்கும். அந்த வவுச்சரை அரசு அல்லது தனியார் சேவை வழங்கும் நிறுவனத்திடம் காண்பித்தால், அந்த வவுச்சரில் குறிப்பிட்டுள்ள பணம் பிடித்தம் செய்யப்படும்.
தாய்-சேய் நலத்திட்டங்கள், காச நோய் ஒழிப்புத் திட்டங்கள், மருந்து, பாரத் ஆயுஷ்மான் மக்கள் சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மருந்து வழங்குதல் மற்றும் பரிசோதனை செய்தல், வேளாண் உர மானியம் வழங்குதல் போன்றவற்றுக்கும் இ-ருபி பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும்.
இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் அரசு நிறுவனங்கள் அல்லது கார்பரேட் நிறுவனங்கள் தனியார் அல்லது பொதுத்துறை வங்கிகளை அணுகலாம். பயனர்கள், அவர்கள் வங்கியில் பதிவு செய்துள்ள செல்பேசி எண் மற்றும் வங்கி ஒதுக்கிய வவுச்சர்கள் மூலம் அடையாளம் காணப்படுவார்கள்.
இந்த இ-ருபி முறை பயன்படுத்த எளிமையானது, பாதுகாப்பானது, நம்பகமானது என்று இந்திய அரசு கூறுகிறது. பயனருக்கு வழங்கப்படும் பணம் எவ்வளவு என்பது ஏற்கெனவே அவருக்கான வவுச்சரில் குறிப்பிடப்படுகிறது. இதனால் பரிவர்த்தனை வேகமாகவும் நம்பகமானதாகவும் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் ஆக்சிஸ் வங்கி, பரோடா வங்கி, கனரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, இந்தியன் வங்கி, கோட்டாக் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்திய ஸ்டேஸ் வங்கி, இந்திய யூனியன் வங்கி ஆகியவற்றில் இ-ருபி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.