அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

 


ஆரோக்கியமான காலை மற்றும் மாலை உணவு’ என்று இதைப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.மிதமான உணவு வகைகளை செய்ய ஏற்றது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது. கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும் அவலில் ஊட்டச்சத்துகள் ஏராளம். 

அரிசியில் இருந்து வெள்ளை அவல், சிகப்பு அவல் போன்றவைகளுடன் தற்போது தினை அவல், கம்பு அவல், சோளஅவல், கேழ்வரகு அவல் போன்றவாறு விதவிதமான அவல்கள் தற்போது இயற்கை அங்காடிகள் மற்றும் விற்பனை கூடங்களில் கிடைக்கின்றன.எந்தவித பண்டிகைகளிலும் அவல், கடலை, வெல்லம் பிரதான இடம் பிடிக்கும். கிருஷ்ணருக்கு குசேலன் கொடுத்தது அவல் தான்.


இதில் வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. 

எவ்வாறு சாப்பிடலாம் ?

“பொதுவாக அவலை தண்ணியிலோ, பாலிலோ ஊறவைத்து சாப்பிடலாம்! அவலோடு பாலும் நெய்யும் சேத்து சாப்பிட்டால் உடல் பலமாகும். அவலும் மோரும் கூட சேர்த்து சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டால் அதிக தாகம் உண்டாவது தீரும். ஆனால்... அவலும் தயிரும் சேர்த்து சாப்பிடக் கூடாது! அப்படி சாப்பிட்டால் மந்தம் உருவாகும்.” நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து உருண்டை செய்து குழந்தைகளுக்குத் தரலாம்.

நன்மைகள்

அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும்.



 ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக்கு உதவும். ரத்தச்சோகை வராமல் காக்கும்.

நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களைக் குடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும். வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.

ஒரே மாதிரியான சிற்றுண்டி மற்றும் காலை உணவுகளை கைவிட்டு புதுமையான சிறுதானிய அவல் வகைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகளும், உடல் எடையை குறைக்கவும், நீரிழிவு நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறையவும் உதவிகரமாக இருக்கின்றன.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.பசியைப் போக்கும்.