சீரக தண்ணீரின் மருத்துவ குணங்கள்


 “உணவே மருந்து மருந்தே உணவு” என்பது தமிழ் சித்தர்கள் கண்டுபிடித்த “சித்த மருத்துவத்தின்” தலையாய கோட்பாடாகும்.நமது நாட்டினர் உணவு தயாரிக்கும் போது உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் பல பொருட்களை அந்த உணவில் சேர்த்தே சமைக்கின்றனர். அப்படி உணவில் சேர்க்கப்படும் பல மகத்துவம் கொண்ட ஒரு உணவு பொருள் தான் ஜீரகம்.நம் வீட்டு சமயலறையில் அஞ்சறைப்பெட்டி நிச்சயமாக இருக்கும்.

ரகம் என்ற பெயரே அதன் தன்மையை விளக்குகிறது. அது நம் அகத்தை(உட்புறத்தை) சீராக்குவதால் அதன் பெயர் சீரகம்.இப்போது சீரக தண்ணீரின் பயன்களை பற்றி பார்ப்போம்


நன்மைகள் 

வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.

இரவில் நேரம் கடந்து உண்பதாலும், பசி எடுப்பதற்கு முன்பே அடுத்த வேளை உணவை உண்பதாலும் பலருக்கும் வயிற்றில் உப்பசம், அஜீரணம் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன. இப்படியான சூழ்நிலைகளில் அரை டீஸ்பூன் ஜீரகத்தை சிறிது நீரில் போட்டு வேக வைத்து குடித்தால் அஜீரணம், வாயு தொந்தரவுகள் போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.


கர்ப்பிணி பெண்களும் சீரக நீர் பருகலாம். அது கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைத் தூண்டும். பால் சுரப்பையும் ஊக்குவிக்கும்.

சீரக நீரில் ஆக்சிஜனேற்ற சக்தி அதிகமாக உள்ளது. அது உடலில் இருந்து கிருமிகளை வெளியேற்றுகிறது. இதன் மூலம் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக செயலாற்றுகிறது. குறிப்பாக இது குடல் இயக்கத்திற்கு மிகுந்த பயன் தருகிறது.

ஜீரக தண்ணீரை தினமும் குடித்து வருபவர்களுக்கு மூளையின் செல்கள் புத்துணர்ச்சியடைகின்றன. இதனால் உடலில் நல்ல சுறுசுறுப்பு தன்மை ஏற்படுகிறது.



நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும்.

சீரகத்தில் அதிகமான இரும்பு சத்து இருப்பதால் இரத்த சோகை நோயாளிகளுக்கு இது ஒரு உகந்த மருந்து. சரியான அளவு இரும்பு சத்து உடலில் இல்லாமல் இருக்கும்போது உடலுக்கு தேவையான சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி குறைகிறது இதனால் ஆக்சிஜென் ஓட்டத்தில் இடையூறு ஏற்படுகிறது. சீரக நீரை தொடர்ந்து அருந்துவதால் இந்த நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.


சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது. சீரகத்தில் உள்ள இரும்பு சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்தசோகையை குணப்படுத்தும்.இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற தன்மையால் சிறு வயதிலேயே வயது முதிர்ந்த தோற்றம் உருவாவதை தடுக்கும்.

ஒரு சிலர் நன்றாக உறங்க முடியாமல், தினந்தோறும் இரவில் பலமணி நேரம் விழித்திருக்கும் நிலை ஏற்படுகிறது. தூக்கமின்மை பிரச்சனை பிற்காலங்களில் பல உடல் நலக்கோளாறுகளை ஏற்படுத்தும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு சிறிது ஜீரக தண்ணீரை அருந்தி வந்தால் தூக்கமின்மை நீங்கும்.


உடல் பருமன் கொண்டவர்கள் அவர்களின் உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவராவிடில் பல விதமான ஆரோக்கிய குறைவுகளை எதிர்காலங்களில் எதிர்கொள்ள நேரிடும். உடல் எடையை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றோடு ஜீரக தண்ணீரையும் தினந்தோறும் சிறிதளவு அருந்தி வர உடலை எடை நன்கு குறையும்.