அசோக அரசன் வரலாறு

 அசோக அரசன் மூன்றாவது. மௌரிய பேரரசனாகவும், இந்தியா முழுவதும் உள்ள துணை கண்டத்தை ஆண்ட மிகப்பெரும் வல்லமை மிக்க அரசனாகவும் திகழ்ந்தார்.



இவர், உலகம் முழுவதும் பெருமளவில் புத்த மதத்தை பரப்பியவராவார். தனது சாம்ராஜியத்தை பெருமளவில் விரிவுபடுத்தி அச்சுறுத்தும் அரசனாக இருந்தார். ஆனால், தமிழகம், கேரளாவை அவர் கைப்பற்ற முடியவில்லை. வன்முறை அரசனாக இருந்த அவர், அதை முற்றிலும் துறந்து அமைதியான பேரரசனாக மாறினார்.

புத்த மதத்திற்கு பெருமளவில் தனது வாழ்வில் பங்காற்றினார். அவரை கௌரவிக்க இந்திய அரசு அசோக அரசரின் சின்னத்தை தேசிய சின்னமாக வைத்துள்ளது. அசோகரின் ஆட்சி காலம் ஒரு புகழ்பெற்ற காலமாக இந்தியாவில் பார்க்கப்பட்டு வருகிறது. அவரது மரணத்திற்கு பின் இந்தியாவில் புத்த மதம் பெருமளவில் பரவவில்லை, என்றாலும் கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் பெருமளவு மக்கள் புத்த மதத்தை தற்போதும் பின்பற்றி வருகின்றனர்.

அத்தகைய அரசரின் வாழ்க்கை வரலாறு...
அசோக மௌரியா, படாலிபுத்ராவில் (தற்போதைய பாட்னா) கி.மு 304ல் இரண்டாம் மௌரிய அரசர் பிந்துசாரா-சுபத்ரங்கி தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு, அசோக வர்த்தனன், தேவனம் பிரியா, பிரியதர்ஷன் என்ற பெயர்களும் உண்டு. இவருக்கு, சுசிமா என்ற சகோதரியும் இருந்தார்.

மௌரிய பேரரசை உருவாக்கி சந்திரகுப்த மௌரிக்கு பல மனைவிகள் மூலம், பல பேரப்பிள்ளைகள் இருந்தனர். அவ்வாறு அசோகருக்கு பல சகோதரர்கள் இருந்தனர்.



ஆனால், அசோகர் சிறுவயதிலேயே போர் பயிற்சியிலும், வேட்டையிலும் சிறந்து விளங்கினார். அது தவிர சிங்கத்துடன் சண்டையிட்டு வெற்றி பெறும் அளவில் பயற்சி பெற்றிருந்தார்.
ஆரம்பத்தில் படை தளபதியாக இருந்த அசோகர், பயமற்ற மற்றும் இதயமற்ற தலைவராக இருந்தார். மௌரிய பேரரசரின், அவந்தி மாகாணத்தில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு அசோகருக்கு வழக்கப்பட்டது.

திறமையுடனும், வலிமையுடனும் அவந்தி கலவரத்தை கையாண்டதால், கிமு 286-ல் அவந்தி மாகாணத்தின் வைஸ்ராய் பொறுப்பு அசோகருக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து டாக்ஸிலாவில் ஏற்பட்ட கிளர்ச்சியை தணிக்க சுசிமாக்கு உதவுமாறு தந்தையால் அசோகர் அனுப்பட்டார். அதையும் திறமையுடன் கையாண்டதால் டாக்ஸிலாவின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டாவது முறையாக டாக்ஸிலாவில் ஏற்பட்ட கிளர்ச்சியையும் அசோகர் திறமையுடன் கையாண்டதாக கூறப்படுகிறது.
கிமு 272ல் அசோகரின் தந்தை பிந்துசாரா மரணமடைந்தார். அதன் பின் ஆட்சி அதிகாரத்திற்கு, சந்திர குப்தாவின் மற்ற மனைவிகள் வழி பிறந்த பேரன்களுடன் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் போரிட்டு விட்டஷோகா என்ற மாகாணம் தவிர மற்ற அனைத்து இடத்திலும் ஆட்சியை பிடித்தார்.

தந்தை இறந்து, நான்கு ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு கிமு 269ல் அசோகர் முடிசூடினார். அதன் பின் தந்தையின் அமைச்சரவையில் இருந்த ராதகுப்தர் என்ற அமைச்சர் தனக்கு உதவியதற்காக முக்கிய அமைச்சர் பொறுப்பை அசோகர் வழங்கினார்.
தொடர்ந்து அசோகர் தனது ஆட்சி காலத்தில் எட்டு ஆண்டுகளில் தொடர்ந்து போரில் ஈடுபட்டார். மேற்கில் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான், கிழக்கில் பங்களாதேஷ் மற்றும் பர்மி எல்லை உள்ளிட்ட இந்திய துணைக் கண்டம் முழுவதும் தனது பேரரசை விரிவுபடுத்தினார்.

தெற்கே கோதாவரி, கிருஷ்ணா படுகை மற்றும் மைசூர் ஆகியவற்றைக் கைப்பற்றி வெற்றி பெற்றார். ஆனால், தெற்கில் உள்ள தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை பிரதேசங்களை அசோகரால் கைப்பற்ற இயலவில்லை
மௌரிய பேரரசர்கள் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்டிருந்தாலும், இந்தியாவின் வடகிழக்கு கடற் கரையில் உள்ள கலிங்க ராஜ்யத்தை ஒருபொழுதும் கைபற்ற இயலவில்லை. எனவே அசோகர் கலிங்க ராஜ்யத்தின் மீது போர் தொடுத்தார்.

கலிங்காவில் நடந்த போரில் 100,000க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். மற்றும் 150,000க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டனர். பெருமளவில் உயிர்கள் போனதை கண்ட பேரரசர் ஆசோகரின் மனதை அது பெரிதும் பாதித்தது. அதிலிருந்து இனி ஒருபோதும் போர் புரிய மாட்டேன் என்று அசோகா சபதம் எடுத்தார். 



அவர் சபதம் எடுத்த அந்த நிகழ்வு இன்றுவரை பாடபுத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
அகிம்சை வழியை பின்பற்ற துவங்கிய அசோகர் புத்த மதத்தால் ஈர்க்கப்பட்டார். புத்த மதத்தையே மாநில மதமாகவும் மாற்றினார். தனது, சாம்ராஜியத்தில் அடிப்படை கொள்கை விதிகளை முற்றிலும் மாற்றினார். அதை பாறைகள், கல்வெட்டுகள் மூலம் வெளியிட்டார்.

தொடர்ந்து புத்த மதத்தை பல நாடுகளில் பரப்ப ஆப்கானிஸ்தான், சிரியா, பெர்சியா, கிரீஸ், இத்தாலி, தாய்லாந்து, வியட்நாம், நேபாளம், பூட்டான், மங்கோலியா, சீனா, கம்போடியா, லாவோஸ் மற்றும் பர்மா ஆகிய நாடுகளுக்கு புத்த துறவிகளை அனுப்பி வைத்தார்.

புத்த மதத்தை பெருமளவில் அவர் பரப்பிய போதிலும், தனது சாம்ராஜியத்தினுள் சமணம், கிரேக்க பாலிதீயம் உள்ளிட்ட மதங்களை பின்பற்றவும் அனுமதித்தார்.


தொடர்ந்து புத்த நினைவு சின்னங்கள் சேமிப்பதற்காக 84,000 ஸ்தூபங்கள் நிறுவினார். தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவில் புத்த துறவிகள் தியானம் செய்ய பல மண்டபங்களை கட்டினார்.

இன்று வரை அசோகர் அரசனின் நினைவு சின்னங்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது. அதில், ஒன்று இந்திய தேசிய கொடியில் உள்ள சக்கரம். மற்றும் மூன்று சிங்க முகங்கள். அதேபோல் அசோக தூண்களும் அவரது நினைவாக உள்ளது.

40 முதல் 50 அடி வரை உயரமுள்ள தூண்களை நேபாள், பாகிஸ்தான் மற்று ஆப்கானிஸ்தான் வரை அசோகர் அமைத்தார். ஆனால், அந்த தூண்களில் தற்போது மொத்தம் 10 மட்டுமே மீதமுள்ளது.



அசோக தூணில் உள்ள சிங்கத்தின் முகம் இன்றுவரை இந்தியாவின் தேசிய சின்னமாக உள்ளது.
கான்ஸ்டடைன்க்கு கீழ் கிறித்துவம் எப்படி வளர்ச்சி பெற்றதோ அதே போல அசோகரின் ராஜ்ஜியத்திற்கு கீழ் புத்த மதம் பெரும் வளர்ச்சியை அடைந்தது. தனது ராஜ்ஜியம் மட்டுமின்றி பக்கத்து ராஜ்ஜியங்களிலும் புத்த மதத்தை அசோகர் பரப்பினார்.

புத்த மதம் மீதான அசோகரின் ஆர்வம் அவரின் மகன் மகேந்திரன் மற்றும் மகள் சங்கமித்ராவையும் ஈர்த்தது. அவர்கள் இருவரும் இலங்கையில் புத்த மதத்தை பரப்பினர். புத்த மதம் இன்று உலகம் முழுவதும் பரவியிருக்க காரணம் அசோகர் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சிகள்தான்.

அசோகர் கிமு 232ல் தனது 72வயது வயதில் படாலிபுத்ராவில் மரணமடைந்தார்.

ஆட்சியை பிடிக்க பல உயிர்களை எடுத்த மன்னராகவும், பெரும் நிலப்பகுதியில் தனது ஆட்சி அதிகாரம் கொண்டிருந்த ஆசோகர் இறுதியில் அகிம்சை மன்னராக உயிரிழந்தார்.