வாயுத் தொல்லையை சரிசெய்வதற்கான வீட்டு வைத்தியம்

 வாயுத் தொல்லை என்பது ஒருவருக்கு உடலளவில் அவஸ்தையை அளிப்பது மட்டுமன்றி,பொது இடங்களில் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்துகிறது.


வாயுத் தொல்லை உங்களை நிம்மதியாக இருக்கவே விடாது. வாயு வந்தாலே வயிற்றுக்கு சிக்கல் தான். ஒரு பக்கம் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். இன்னொரு பக்கம் வயிறுக்குள்ளே ஏதோ பாறாங்கல்லைக் கட்டி வைத்தது போல் கனமாக இருக்கும்.

சிலபேருக்கு வயிற்றில் வலி, வயிறு வீக்கம், நெஞ்செரிச்சல் என்று மாறி மாறி ஒன்று வந்துகொண்டே இருக்கும். அதிகப்படியான வாயு வயிற்றில் தங்குவதால் தான் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.

வயிற்றில் வாயு தங்க இரண்டு விதமான காரணங்கள் உள்ளன. உணவு சாப்பிடும் போதோ அல்லது தண்ணீர் குடிக்கும் போதோ ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் போன்ற வாயுக்கள் வயிற்றுக்குள் நுழைந்து வாயுத் தொல்லையை ஏற்படுத்துகிறது.

மற்றொரு காரணம் உணவு செரிக்கப்படும் போது வேதி வினையிலிருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன், மீத்தேன் போன்ற வாயுக்கள் வயிற்றினுள் தங்கி விடுகின்றன. இந்த வாயுக்கள் வெளியே றாமல் அப்படியே இருப்பதால் வயிற்றுக்குள் அசெளகரியம் ஏற்படுகிறது.

பீன்ஸ், முளைக்கட்டிய தானியங்கள், முட்டைகோஸ் போன்றவற்றில் இருக்கும் ராஃபினோஸ் (Raffinose), உருளைக் கிழங்கில் உள்ள ஸ்டார்ச் காரணமாக வாயுப் பெருக்கம் ஏற்படலாம். பருப்பு வகைகள், வாழைக்காய் போன்றவையும் வாயு உண்டாக்கும் வஸ்துக்களே. இவற்றைச் சமைக்கும் போது அதிகளவில் மிளகு, சீரகம் சேர்த்துக்கொள்ளலாம். மிளகு மற்றும் சீரகத்துக்கு இருக்கும் வாய்வகற்றி செய்கை காரணமாக, குடலில் வாயு உண்டாகாது. இருப்பினும் வாயுத் தொல்லை இருப்பவர்கள் குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றைச் சிறிது காலத்திற்கு ஒதுக்கி வைப்பது நல்லது.


தினந்தோறும் உடற்பயிற்சி செய்யுங்கள்.கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களை அருந்தாதீர்கள்.அடிக்கடி முட்டை மற்றும் பால் ஆகியவற்றை அருந்தாதீர்கள்.சாப்பிட்டதும் படுக்காதீர்கள்.

வாயுப் பிரச்சனை இருப்பவர்கள் 1/2 டீ ஸ்பூன் ஓம விதைகளைத் தண்ணீரில் போட்டு ஒரு நாளைக்கு என குடித்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

நீங்கள் உண்ணும் அனைத்து வகையான உணவுகளிலும் இரண்டு ஏலக்காயை சேர்க்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.வாயுத் தொல்லை வரவே வராது.

பூண்டின் மணமும்,அதன் வெப்பமூட்டும் குணமும்,வாயுத் தொல்லையால் ஏற்படும் எரிச்சலை குறைக்கும்.உங்களுக்கு வாயுப்பிடிப்பு இருந்தால்,பிரெஷ்ஷான பூண்டிலிருந்து எடுக்கப்படும் சாற்றை அருந்தினால் தீர்வு கிடைக்கும்.

இஞ்சி வாய்த் தொல்லைக்கு மிகச்சிறந்த தீர்வு.இஞ்சியை உணவருந்திய பின்னர் எந்த வடிவத்தை உட்கொண்டாலும் வாயுத் தொல்லை தீரும்.

1 டீ ஸ்பூன் பெருங்காயத்தூளைச் சிறிது வெந்நீரில் கலந்து கொள்ளுங்கள். வாயுவை போக்கும் சிறந்த மருந்து பெருங்காயம். இது குடலில் அதிகமான பாக்டீரியாக்கள் உருவாகுவதைத் தடுத்து வாயுவை வெளியேற்றுகிறது.

வாயுத் தொல்லை நீங்க திரிபுலா பவுடர் பயன்படுகிறது. 1/2 டீ ஸ்பூன் திரிபுலா பொடியை நீரில் போட்டு 5-10 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். இதைக் குடித்து வந்தால் வாயுத் தொல்லை இருக்காது.

உணவருந்துவதற்கு முன்னர் அரை கிளாஸ் தக்காளி சாற்றை குடித்துவிட்டு,உணவருந்தினால் வாயுத் தொல்லை நீங்கும்.