எண்ணற்ற மருத்துவ மூலிகைகளை கொண்ட நாடு நமது இந்திய நாடு. இந்த நாட்டில் தான் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பல மருத்துவ முறைகள் தோன்றியுள்ளன. இவற்றில் மருத்துவ சிகிச்சைக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது மூலிகைகள் ஆகும். அப்படியான மூலிகைகளில் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட மூலிகையாக “தூதுவளை” இருக்கிறது.
கீரைகள் சத்து மிகுந்தவை. உடலை ஆரோக்கியமாகவும் நோயில்லாமலும் காக்ககூடியவை. மூலிகை தன்மை கொண்டு சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட கீரைகளின் பட்டியலில் தூதுவளைக்கீரையும் அடக்கம்.தூதுவளை கீரையில் இலைகள், தண்டு, காய், இதன் பூக்கள் வரை எல்லாமே மருத்துவ குணங்களைக் கொண்டவையே.
தூதுவளை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். தூதுவளைக்கீரையில் புரதம், கொழுப்பு, தாதுச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம். இரும்புச்சத்து இருக்கிறது.
நன்மைகள்
நெஞ்சு சளி, இருமல் விடாமல் இருந்தால் தூதுவளைக்கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து நசுக்கி அதன் சாறை கொதிக்கவைத்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து அருந்தினால் சட்டென்று இருமல் நிற்கும். நெஞ்சு சளி கரையும்.
நீரிழிவு நோய் இருப்பவர்கள் அவை கட்டுப்படாமல் இருக்கும் போது அதனால் உடலில் வேறு பல பாதிப்புகளையும் சந்திப்பார்கள். அத்தகைய பாதிப்பு நேராமல் காப்பதிலும் நீரிழிவை கட்டுக்குள் வைக்கவும் தூதுவளை உதவி புரிகிறது. வாரத்துக்கு மூன்று நாட்கள் தூதுவளையை உணவில் சேர்த்துவருவதன் மூலம் நீரிழிவு கட்டுக்குள் வைக்கலாம்.
புற்றுநோய் ஒரு மிக கொடிய நோய். இந்நோய்க்கு ஆங்கில வழி மருந்துகளை உட்கொள்ளும் வேளையில் நமது பாரம்பரிய மூலிகையான தூதுவளையை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது.
மனிதனின் முறையான சுவாசத்தை பாதிக்கும் நோய்களாக இருப்பது ஆஸ்துமா, ஈசினோபிலியா போன்றவை இந்நோய்களை போக்க, இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக தயாரித்து காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா,ஈசினோபிலியா நோய்கள் நீங்குவதோடு அந்நோய்கள் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தாகவும் செயல்படும்.
வயது கூடிக்கொண்டே செல்லும் காலத்தில் பலருக்கும் ஞாபக திறன் குறைவது சகஜமான ஒன்றாகும். அனைத்து வயதினரும் தொடர்ந்து தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடையும். இது மூளையில் இருக்கும் செல்களை தூண்டி நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.
புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின்விளைவுகளால் புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.
உடலில் இருக்கும் ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற ரத்த அணுக்கள் அவற்றிற்குண்டான அளவில் இருக்க வேண்டியது அவசியம்.ஈரத்தத்தில் சிவப்பு இரத்த அணுக்கள் குறையும் போது இரத்த சோகை ஏற்படுகிறது. இந்நோய் பிரச்சனை தீர தூதுவளை பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.