கருவாட்டின் நன்மைகள்

 மீனில் அதிக புரதச் சத்துகள் உள்ளது நாம் அனைவரும் அறிந்த விஷயமாகும், மீனை நாம் எடுத்துக் கொள்ளும் அளவு கருவாடை எடுத்துக் கொள்வதில்லை.மீன்கள் அதிகமாக கிடைக்கும் பட்சத்தில் அதில் உப்பினை கலந்து கருவாடாக்கி பல காலம் வைத்து உண்கிறோம். அப்படிப்பட்ட உணவில் இந்த மாசி மீன் மிக, மிக முக்கியமான மீன் வகை ஆகும். இதற்கு உப்பினை சேர்க்காமல் காய வைப்பது ஆகும். அதை கருவாடாக ஆக்கி வைத்தால் அது புளியங்கட்டை போல் இருக்கும். இந்த மாசி கருவாடு உண்பதால் நமது உடலில் சப்த தாதுக்களும் உண்டாகும்.


மாசி கருவாடு இப்போது பெரும்பகுதி உணவில் சேர்த்து கொள்வது இல்லை. இதனால் உடல் நலக்கேடு உண்டாகுவதற்கு இந்த கருவாடு சமையலில் சேர்க்காதது தான். இந்த மாசி கருவாட்டில் மற்ற கருவாடுகளில் உள்ளது போன்று முள் இருக்காது. புளியங்கட்டையை அறுத்து வைத்தது போல் இருக்கும். அந்த மாசி கருவாட்டை வாங்கி அதை அப்படியே வைத்து கொள்ளலாம். எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெடாது. இந்த மாசிக்கருவாடு வீட்டில் வைத்தால் கருவாடு வாசனை வராது.

நன்மைகள்

பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பிரச்சினைகளான நீர்ப்பை, சினைப்பை, கருப்பை போன்ற பிரச்சினைகளைச் சரி செய்வதாய் உள்ளது.

மேலும் இது வாத ஓட்டம், பித்த ஓட்டம், ரத்த ஓட்டம் போன்றவற்றினைச் சரிசெய்வதாக உள்ளது, மேலும் சளித் தொல்லை, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் கருவாட்டுச் சாறினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.


பிரசவித்த தாய்மார்கள் பால் சுரக்க பூண்டு, லேகியம் எனப் பல வகையான உணவுப் பொருட்களை சாப்பிட்டு பால் உற்பத்தியினை அதிகரிப்பர். அவர்கள் நிச்சயம் பால் சுறா கருவாட்டினை எடுத்துக் கொண்டால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.

கருவாட்டினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். மேலும் உடல் நலம் குன்றியவர்கள் கருவாட்டுக் குழம்பினை எடுத்துக் கொண்டால், உடல் நலம் தேறுவார்கள்.

கருவாட்டை எந்தெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது, யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என உங்களுக்கு தெரியுமா?

கருவாடு மட்டுமின்றி மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போதும், மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. இது புட் பாய்சன் ஆக காரணமாகலாம்.


தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகள் சாப்பிட கூடாது.

இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பு அதிகமான உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது, ஆகையால் அவர்கள் கருவாடு அதிகம் உண்ணுதல் கூடாது.

மீன், கருவாடு சாப்பிட்ட பிறகு பால், தயிர் சாப்பிடக்கூடாது. மீறி உண்டால் "வெண் மேகம்" போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.