நம்முடைய வீடுகளில் மிகவும் செல்லமாக வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணி நாய். வீட்டை காவல் காப்பதிலும் நாய்க்கு முக்கிய பங்குண்டு. இப்படி நம்மில் பலருக்கும் பிடித்த செல்ல பிராணியான நாய்களை பற்றி சுவரஸ்யமான தகவல்களை பற்றி பார்ப்போம்.
உலகில் சுமார் 400 மில்லியன் நாய்கள் உள்ளன. இன்றுள்ள வளர்ப்பு நாய்கள் ஏறத்தாழ 17,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஓநாய்களைப் பழக்கி நாயினமாக வளர்த்தெடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.மேலும் நாய்கள் ஓநாய்களின் நேரடி சந்ததியினர் என்றும் கூறுவார்கள்.
150,000 ஆண்டுகளுக்கு முன்னமேயே கூட நாய்கள் பழக்கப்பட்டிருக்கலாம் என மறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற டி.என்.ஏ ஆய்வுகள் கூறுகிறது.
நாய்க்குட்டி பிறந்த உடனேயே தாய் நாயை விட்டுப் பிரிக்காமல் 40 நாட்களுக்குப் பிறகு எடுத்து வந்து வளர்த்தால் குட்டி ஆரோக்கியமாய் இருக்கும்.
நாய்களில் நூற்றுக்கணக்கான வெவ்வேறு இனங்கள் உள்ளன. புல்டாக், ஜெர்மன் ஷெப்பர்ட், கோலி, கோல்டன் ரெட்ரீவர், செயின்ட் பெர்னார்ட், கிரேஹவுண்ட், பிளட்ஹவுண்ட், சிவாவா, லாப்ரடோர், கிரேட் டேன், ரோட்வீலர், பாக்ஸர் மற்றும் காக்கர் ஸ்பானியல் என பல வகைகள் உள்ளன.
அதுமட்டுமில்லமால் தமிழக நாட்டு நாய்களான கன்னி, ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை வகைகளும் உள்ளன.
நாய் மனிதர்களை விட அதிக கேட்கும் திறன் கொண்டது, மனிதர்களை விட நான்கு மடங்கு தூரத்தில் உள்ள ஒலியை கூட கேட்கும் .
நாய்கள் மனிதர்களை விட கிட்டத்தட்ட 100 மில்லியன் மடங்கு குறைவான அளவுகளில் வாசனைகளை வேறுபடுத்தும் திறன் கொண்டவை. ஒரு நாயின் வாசனை உணர்வு மனிதனை விட 10,000 மடங்கு வலிமையானது.
ஒரு நாயின் சராசரி ஆயுட்காலம் சுமார் 10 முதல் 14 ஆண்டுகள் . பொதுவாக சிறிய இன நாய்கள் பெரிய இனங்களை விட நீண்ட காலம் வாழ்கின்றன.
நாய்க்குட்டிகள் நம்மை போல மறைந்து விளையாடும் விளையாட்டுகளை அதிகம் விரும்புமாம். நீங்கள் மறைந்திருந்து உங்கள் நாய்க்குட்டியின் பெயரை அழைத்தால் உங்களை தேடி வந்து கொஞ்சுவது நாய்க்கு ரொம்ப பிடிக்கும்.
நாய்கள் நாம் சொல்லி கொடுக்கும்1000 க்கும் மேற்பட்ட சொற்களைக் கற்றுக்கொள்ளுமாம். உங்க நாய் குட்டிக்கும் சொல்லி கொடுத்து பாருங்க. எளிய கணித சிக்கல்களை எண்ணவும் தீர்க்கவும் நாய்களுக்கு கற்பிக்க முடியும்.
நாய்க்குட்டிகள் முதல் நான்கு முதல் ஐந்து மாதங்களில் உடல் எடையில் பாதி வரை வளருமாம். இந்த விரைவான உடல் வளர்ச்சி கால கட்டத்தில் நாய்க்குட்டிகள் ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் வரை தூங்கும்.
கிரேஹவுண்ட் இன நாய்கள் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. நாட்டு நாயான சிப்பிப்பாறை நாய் 45 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.
நாய்களில் மிகப் பெரிய இனமான மாஸ்டிஃப் சுமார் 90 கிலோ வரை எடையை கொண்டிருக்கும்.
மனிதர்களுக்கு கைரேகைகளில் வித்தியாசம் இருப்பது போலவே நாய்களின் மூக்கு ரேகைகளிலும் வித்தியாசம் இருக்கும்.
15 சென்டி மீட்டர் உயரம் இருக்கும் சிஹுவாகுவா இன நாய்கள் மிகவும் குறுகிய இன நாய்களாகும். ஐரிஷ் வொல்ஃப்ஹவுண்ட்ஸ், மிக உயரமான இனம், 76 முதல் 88 சென்டி மீட்டர் உயரம் வரை இருக்கும். தமிழ்நாட்டு நாய்களில் ராஜபாளையத்து நாய் மட்டும் தான் 75 செ.மீ வரை வளரும்.
லைக்கா என்ற ரஷ்ய நாய் விண்வெளிக்கு சென்ற முதல் விலங்கு, 1957 இல் இது பூமியைச் சுற்றி வந்தது.
நாய்களுக்கு மனிதர்களை விட பற்கள் அதிகம். நாய்க்குட்டிகளுக்கு 28 பற்களும், வயது வந்த நாய்களுக்கு 42 பற்களும் உள்ளன.
அலாஸ்கன் மலாமுட் இன நாய்கள் 70 டிகிரி முதல் பூஜ்யம் டிகிரி வரை வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டது.
நாயை செல்ல பிராணிகளாக வீட்டில் வளர்ப்பவர்களுக்கு இரத்த அழுத்தம் குறையும்.
ஒரு பெண் நாய் அதன் துணை மற்றும் அவற்றின் நாய்க்குட்டிகளும் சேர்ந்து ஆறு ஆண்டுகளில் 67,000 நாய்க்குட்டிகளை பெற்றெடுக்க முடியும்.
நாய்க்குட்டிகளுக்கு பிறக்கும் போது கண் காணாது, காது கேட்காது, பல் இருக்காது .
உலக புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் இருந்த 12 நாய்களில் மூன்று நாய்கள் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
நேஷனல் ஜியோகிராஃபிக் டாக்டர் பிராடி பார் ஒரு நாயின் சராசரி கடி சக்தியை ஒரு சதுர அங்குலத்திற்கு 320 பவுண்டுகள் அழுத்தமாக அளந்தார்.
பேரி என்ற நாய் 1800 களின் முற்பகுதியில் மலை மீட்பு பணிகளில் 40 உயிர்களைக் காப்பாற்றியதாம்.
நாய்கள் பொதுவாக மழையை விரும்புவதில்லை காரணம் மழையால் ஏற்படும் அதிக ஒலி நாய்களின் காதுகளில் உள்ள உணர்திறனை காயப்படுத்கிறது.
உலக நாய்கள் தினம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.
வெளிநாட்டு இன நாய்களின் வருகையால்,நாட்டு நாய்களை வளர்ப்பது தொடர்ந்து குறைந்து வருகிறது.இதனால் தமிழக நாட்டின நாய்கள் அழிந்து வருகின்றன.எனவே இனி நாய் வளர்க்க விரும்புவோர் தமிழக நாட்டின நாய்களை தேர்ந்தெடுங்கள்.
தமிழக நாட்டின் நாய்கள் அடிக்கடி நோய்வாய்படாது.பிரத்யேக உணவுகள் ஏதும் தேவையில்லை.மற்ற நாய்களை விட ஆற்றலிலும்,அறிவுக் கூர்மையிலும் உயர்ந்தவை.