கோடை காலம் வந்து விட்டாலே உணவு பழகத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் மற்ற காலங்களைத் தவிர, கோடையில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தாங்கிக் கொள்ளவே முடியாது. குறிப்பாக வெயில் காலத்தில் காதாரணமாகவே உடல் வெப்பமானது விரைவில் அதிகரித்துவிடும். ஆகவே அப்போது சாப்பிடும் சாப்பிடும் உணவுப் பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தக்காளி : தக்காளி வைட்டமின் C மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டை உள்ளடக்கியது. லக்கோபின் போன்ற ஃபைட்டோகெமிக்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது. இது தொற்று நோய், நாள்பட்ட வியாதிகளையும் குணப்படுத்தும்.
வெள்ளரிக்காய் : அதிக நார்ச் சத்து நிறைந்த காய். கோடைக்கு மிகவும் உகந்த வெள்ளரியை சாலட் செய்து சாப்பிடலாம். தயிரில் கலந்தும் சாப்பிடலாம். நீரேற்றம் அதிகரிக்கும்.
தர்பூசணி : நீரேற்றத்தின் நாயகன் என அழைக்கப்படும் தர்பூசணியை தினமும் ஜுஸாக அருந்தலாம். நீங்கள் கடுமையாக சூரிய வெப்பத்தால் வாடியிருந்தாலும் தர்பூசணியை உண்டால் போதும் குளிர்ச்சியாக்கிவிடும். அதேபோல் சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் லைக்கோபின் ( lycopene ) என்னும் சத்து தர்பூசணியில் உள்ளது.
ஆரஞ்சு :சிட்ரஸ் நிறைந்த பழமான ஆரஞ்சில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. ஆரஞ்சில் 80% நீர் நிறைந்துள்ளது. அதனால் வெயில் நாட்களில் ஆரஞ்சை உட்கொள்வதால் உடல் வெப்பத்தைத் தணிக்க முடியும்.
தயிர் : புரோட்டீன்களை உள்ளடக்கிய தயிர் வெயில் நாட்களில் தவிர்க்க முடியாத உணவு. அதேபோல் அதிக உணவு உண்ண விரும்பாதவர்கள் தயிரை உண்டால் உடனே வயிறு நிறைந்து உடல் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும். தயிரில் இருக்கும், ப்ரொபியோடிக்ஸ் (probiotics ) ஜீரண சக்தியை சீராக்கும்.
க்ரீன் டீ : நீங்கள் உடல் நீரேற்றத்திற்காக அதிக நீர் அருந்துகிறீர்கள் என்றால் க்ரீன் டீயையும் அருந்துங்கள். இது நீருக்கு சிறந்த மாற்று. இது நீரைக் காட்டிலும் அதிக நீரேற்றத்தை அளிக்கக் கூடியது.
திராட்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி : இவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கக் கூடியது. வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகளையும் தவிர்க்க உதவும்.
முலாம் பழம் : கிர்ணி பழம் , முலாம் பழம் என அழைக்கப்படும் இந்த பழமும் கோடைக்கால வரவில் தர்பூசணிக்கு அடுத்து முக்கிய இடம் பிடிக்கக் கூடியது. இதை தினமும் ஜூஸாக அருந்தலாம். உடலின் வெப்பம் தனியும்.
கம்பு கூழ்: தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவில் கம்பு கூழும் பிரசித்தம். இரும்பு, கால்ஷியம், வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்தது. இதனைக் குடித்துத்தான் நம் முன்னோர்கள் ஏசி இல்லாமல் இயற்கையிலேயே குளு குளு வென்று இருந்தார்கள். நோய், வெய்யில் கொடுமை இவற்றிலிருந்து தப்பிக்க இவ்வகை உணவுகள் பெரிதாய் உதவும்.
கரும்பு சாறு: இதனை வாங்கும் பொழுது சுகாதாரமான தாக இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். கரும்பு சாறு, இஞ்சி, எலுமிச்சை சாறு கலந்து தரப் படும் பொழுது சிறுநீர் பாதையில் ஏற்படும் பாதிப்பினை வெகுவாய் தவிர்த்து விடுகின்றது.
நொங்கு: இதனை ஐஸ் ஆப்பிள் என்பர் அந்த அளவு குளிர்ச்சியினை உடலுக்குத் தர வல்லது.
நெல்லிக்காய்: இதனை சிறிதளவு ஜுசாகவே தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். இத்தனை இருக்கும் பொழுது கோடை உங்களுக்கு ஊட்டி, கொடைக்கானல்தான்.