கால் வலிக்கான சில எளிய இயற்கை வழிகள் .

 குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கால் வலி என்பதை சாதாரணமாக கொண்டிருக்கிறார்கள். தினசரி இந்த வலியை வழக்கமாகவே கொண்டிருப்பவர்களும் உண்டு.

கால்வலி மந்தமாகவோ, கடுமையாகவோ, கூர்மையாகவோ இருக்கலாம்.

வலிகளில் வித்தியாசம் போன்று இவை வருவதற்கான காரணங்களும் பல உண்டு. ஊட்டச்சத்து குறைபாடு, தசை பிடிப்பு, பலவீனமான தசை, நின்று கொண்டே இருப்பது, நரம்பு சார்ந்த பிரச்சனைகள், சமயங்களில் நீரிழிவு இருப்பவர்களுக்கும் கூட இந்த கால்வலி உபாதை உண்டாகும். ஆரம்பத்தில் கால்கள் வலிக்க ஆரம்பித்து, பின் நாளாக ஆக தாங்க முடியாத வலியை உண்டாக்கும். கால்கள் வலிப்பதற்கு உடல் பருமன் மட்டும் காரணமல்ல, வேறுசில காரணங்களும் உள்ளன. சில வகையான கால் வலிகள் எரிச்சலூட்டி, மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். இன்னும் சில வகை கால் வலிகள் மிகுந்த வலியை உண்டாக்கும்.


இந்த கால் வலிகளுக்கு தீர்வே கிடையாதா என்று பலர் புலம்புவார்கள். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், கால் வலிகளுக்கு இயற்கையாகவே எளிதில் தீர்வு காணலாம். கால் வலிக்கான சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.


 ஒரு வாணலியில் அரிசியைப் போட்டு சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதை ஒரு மென்மையான துணியில் போட்டு கட்டி, அதனைக் கொண்டு வலியுள்ள கால் பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை தொடர்ந்து செய்து வந்தால், கால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நல்ல மாற்றத்தைக் காண இந்த செயலை தொடர்ந்து ஒரு வாரம் தவறாமல் பின்பற்ற வேண்டும்.


 

1 டீஸ்பூன் வின்டர்க்ரீன் ஆயிலுடன், 4 டீஸ்பூன் வெஜிடேபிள் ஆயில் மற்றும் வைட்டமின் ஈ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த எண்ணெய் கலவையை பாதிக்கப்பட்ட கால் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர, கால் வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

யோகாசனங்களின் மூலம் கால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். கால் வலியில் இருந்து நிவாரணம் அளிக்க சர்வங்காசனத்தை தினமும் செய்வது நல்லது. அத்துடன் சாவாசனம் மற்றும் புஜங்காசனம் போன்றவற்றையும் சேர்த்து செய்து வருவது கால் வலிக்கு மிகவும் நல்லது.


ஒரு பாத்திரத்தில் மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்துக் கொள்ளுங்கள். பின் அதில் 1-2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.  பின்பு இந்த பாலை வெதுவெதுப்பான நிலையில் குடியுங்கள். இப்படி தினமம் 2 முறை என கால் வலி போகும் வரை குடியுங்கள்.

1- 2 கப் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் வலிமிக்க கால்களை 30-40 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 

ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1 கப் எப்சம் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதில் இரண்டு கால்களையும் 15-20 நிமிடம் ஊற வையுங்கள். இந்த முறையை தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர, கால் வலி குறையும்.


கால் வலியால் கஷ்டப்படுபவர்கள் வைட்டமின் டி நிறைந்த உணவை அதிகம் சாப்பிட வேண்டும்.  முக்கியமாக அதிகாலை சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து நடைப்பயிற்சியை மேற்கொண்டால், கால் வலி வருவது குறையும்.


உலர் திராட்சை, ப்ளம்ஸ், நட்ஸ் மற்றும் தக்காளி ஜூஸ் குடியுங்கள். ஏனெனில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், கால் வலி வருவது தடுக்கப்படும். இதனால் தான் மருத்துவர்களும் கால் வலிக்கு பொட்டாசிய மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள்.