இமயமலை : இமயமலையின் 5 மர்மமான இடங்கள்
உலகையே பிரம்மிப்பூட்டும் மற்றும் அதிசயத்தில் ஆழ்த்தும் இமயமலை.அறிவியலையே ஆர்வம்கொள்ள வைக்கும் பல அற்புதங்களை மட்டுமில்லமால் பல மர்மங்களையும் தன்னுள் புதைத்து வைத்துள்ளது.
இமயமலைத்தொடரில் நூற்றுக்கு மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இதில் சிலவற்றின் உயரம் 7200 மீட்டருக்கு மேலாகும்
குருடோங்மர் ஏரி
டீஸ்டா நதியின் மூலமாக விளங்கும் இந்த ஏரி,கஞ்சன்சுங்கா மலைத்தொடரில் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.நீங்கள் எப்போது இந்த ஏரிக்கு சென்றாலும் அல்லது கடுமையான குளிர்காலத்தில் சென்றாலும் கூட ஏரியில் உறைந்து போகாத ஒரு சிறிய இடத்தைக் காண்பீர்கள்.அதன் மர்மத்தை பொறுத்த வரையில், புகழ்பெற்ற பௌத்த குரு பத்மசம்பவா அவர்கள் ஏரியில் அந்த இடத்தை தொட்டு, மக்கள் பயன்பெற அந்த நீர் உரையாமலிருக்க ஆசீர்வதித்தார் என்று இன்றளவும் அங்கு வாழும் மக்களால் நம்பப்படுகிறது.உங்களால் நம்ப முடிகிறதோ இல்லையோ, மிகக் கடுமையான குளிர்காலத்தில் கூட சுற்றுலா வாசிகளும், உள்ளூர் மக்களும் அந்த ஏரியில் உரையாமலிருக்கும் அந்த சிறிய பகுதியை கண்டு வியக்கிறார்கள்.
ரூப்குண்ட் ஏரி
ரூப்குண்ட் உத்தரகண்ட் மாநிலத்தில் மிகவும் ஈர்க்கக்கூடிய மற்றும் அழகான மலைப்பிரதேசத்தில் ஒன்றாகும். இதற்கு பிரம்மிக்கக்கூடிய வகையில் பல சிறப்புகள் இருந்தாலும் ,ஒரு பரபரப்பான மர்மம், சுற்றுலாவாசிகளை இங்கு வர ஆர்வத்தை தூண்டுகிறது. இதன் மர்மம்,ஏரியின் அருகில் உள்ள பாறைகளில் சிதறிக் கிடக்கும் மனித மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகள் மற்றும் எலும்புகள். இங்கு மலையேறும் மனிதர்களின் பல புகைப்படங்கள் மற்றும் பார்வையாளர்களின் கணக்குகளில் பகிரப்பட்ட புகைப்படங்களே ஆதாரமாக விளங்குகிறது. இந்த எலும்புக்கூடுகளுக்கான உண்மை இது வரையிலும் மர்மமாகவே உள்ளது. ஏனெனில் ரூப்குண்ட் ஏரி இன்றளவும் மர்மத்தின் புகலிடமாகவே விளங்குகிறது.
பாரோ தக்சங்
பூட்டானின் ஒவ்வொரு பயணத்திலும் இன்றியமையாத, செங்குத்தான மலை முகட்டிலுள்ள இந்த பெளத்த மடாலயம் பற்றி கூற ஒரு கதை உள்ளது. இந்த மடத்தின் மையத்தில், ஒரு குகை உள்ளது.இங்கு குரு பத்மசம்பவா மூன்று ஆண்டுகள், மூன்று மாதங்கள், மூன்று வாரங்கள், மூன்று நாட்கள் மற்றும் மூன்று மணி நேரம் தியானித்தார்.
இங்குள்ள மர்மம் அது அமைந்திருக்கும் இடமாகும். மிகக் கடினமான இந்த மலையேற்றத்திற்கு குரு பத்மசம்பவா திபெத்திலிருந்து ஒரு புலியின் மீது பறந்து இந்த இடத்தை அடைந்தார் என்பதால் இவ்விடம் புலியின் கூடு என்று அழைக்கப்படுவதாக நம்பப்படுகிறது.
இந்த மடாலயம்,1692 ஆம் ஆண்டில் தியான மண்டபமாக கட்டப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இது ஒரு அறிய சாதனையாகும்.
கங்கர் புயென்ஸம்
உலகின் மிக உயரமான, மனிதக் காலடி படாத இடமாக விளங்குகிறது கங்கர் புயென்ஸம். பூட்டானில் அமைந்துள்ள இந்த மலை பல முறை அளவிடப்பட்டுள்ளது. ஆனால் அளவிடப்பட்ட புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பொருந்தவில்லை. அது மனித அளவீட்டின் தவறாகக் கூட இருக்கலாம். என்றாலும், இந்த மலையின் உச்சியை மனிதன் அடைய முடியவில்லை என்பதே உண்மையாகும். பூட்டானியர்கள் இங்கு எடிஸ் மற்றும் கடவுள்கள் உள்ளிட்ட புராண உயிரினங்களின் இருப்பிடமாக இருப்பதாக நம்புகிறார்கள். அதன் உச்சியை அடைய முற்பட்டு பல தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு, இந்த மலைகள் புகழ்பெற்றன. விவரிக்கப்படாத சப்தங்கள், மர்ம விளக்குகள் மற்றும் மாயத்தோற்றங்கள் உள்ளிட்ட விசித்திரமான நிகழ்வுகளின் வழக்குகள் மலைக்கு அருகில் வசிப்பவர்களிடமிருந்து வெளியாகியுள்ளது.
ஞாங்கஞ்ச்
அழிவில்லாதவர்களின் நகரம் என்று அழைக்கப்படும் ஞாங்கஞ்ச் இமயமலையின் தொலைதூர, அணுக முடியாத பள்ளத்தாக்கில் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்த இடத்தை அறிய மலையேறுபவர்கள் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைகின்றன. இன்று வரை எந்த ஒரு தொழில்நுட்பத்தை கொண்டும் அதை கண்டறிய முடியவில்லை.குறிப்பாக திபெத் மற்றும் இந்தியாவை சேர்ந்த பௌத்தர்கள், ஞாங்கஞ்ச் ஒரு இடம் மட்டுமல்ல, உயர்ந்த பரிமாணமும் என்று கருதுகின்றனர். முனிவர்கள், யோகிகள் மற்றும் பிற தகுதியான ஆத்மாக்களால் மட்டுமே ஞாங்கஞ்சைக் கண்டுபிடித்து அடைய முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இங்கு தங்க விரும்புவோர் அழியாமையைப் பெறுவார்கள்! என்று நாட்டுப்புறக் கதைகளில் கூறப்பட்டுள்ளது, ஆனால் சில புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவர்கள் இதைப் பார்வையிடுவதாகக் கூறி, இவ்விடத்தை மேலும் பிரபலமடையச் செய்தனர்.